சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு,
இப்போது திமுகவையும் கருணாநிதியையும் திட்டி தீர்த்துக்கொண்டிருக்கும் பலரைப்போலஅப்போது நானும் கருணாநிதியின் தீவிர ரசிகனாய் ஒரு ஆர்வலராய் இருந்த நேரம்
நேரம் கிடைக்கும் போதெல்லாம் அறிவாலயத்துக்கு அடிக்கடி வருவேன் ... ஓரமாய் அமர்ந்து அங்கு நடக்கும் காரியங்களை ஒரு வித ஆத்ம திருப்தியோடு ரசித்துக் கொண்டிருப்பேன்.
‘ஆஹா, இப்படி ஒரு அற்புதமான இயக்கதில்(?) உலகத்தில் எவனுக்கும் கிடைக்காத ஒப்பற்ற ஒரு தலைவனுக்கு(!) தொண்டனாக இருப்பதையே’ பெருமை என கருதிக்கொண்டிருந்த காலம் அது.
அப்படி ஒருநாள் நான் அங்கு இருக்கும் வேளையில் சில இளைஞர்கள் கலைஞரை பார்க்க ஆளுயர ரோஜாப்பூ மாலையோடு வந்தார்கள்.
கலைஞரை பார்ப்பதென்பது எப்போதும் எவருக்கும் சுலபமான காரியமானபடியால் அந்த இளைஞர்கள் சற்று நேரத்தில் கலைஞரின் அறைக்குள் மாலையோடு போனார்கள்.
வெளியே வந்த அந்த மாணவர்களிடம் பேசியபோது மேற்படி மாணவர்கள் ,சென்னை பச்
சயப்பன் கல்லூரி மாணவர்கள் என்பதையும் கல்லூரி மாணவர் பேரவை தேர்தலில் கழகத்தின் சார்பில் வேற்றி பெற்ற அவர்கள் தலைவரை பார்த்து மாலை அணிவித்து வாழ்த்து பெறுவதற்காக வந்ததாகவும் சொன்னார்கள்.
பிறகு அந்த மாணவர்கள் அங்கிருந்து போய்விட்டார்கள் அதன்பிறகுதான் அந்த விபரீதம் நடந்தது..
சற்று நேரத்தில் தலைவர் கலைஞர் அறிவாலயத்திலிருந்து கிளம்பப் போவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.
அறிவாலயத்தில் இருந்த செயல் மணியும் கருணாநிதியின் அப்போதைய ஓட்டுனராக இருந்த மணியும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கலைஞருக்கு அணிவித்த அந்த ஆளுயர மாலையை தூக்கி வந்து கலைஞரின் காரில் ஏற்றினார்கள்.
இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது
நான் மணியிடம் ‘என்னண்ணே மாலைய தலைவர் வண்டில ஏத்துறீங்க..?’ என்றேன்.
அதற்கு மணி சைதாப்பேட்டையில் அன்று காலையில் காலமான ஒரு மூத்த திமுக கவிஞரின் பெயரைச்சொல்லிவிட்டு ’தலைவர் அவர் பாடிக்கு மாலை போடப்போறாருப்பா..’ என்றார் சர்வ சாதாரணமாக..
அன்றிலிருந்துதான் கருணாநிதி பற்றி எனக்குள் இருந்த பிம்பம் உடைய ஆரம்பித்தது..!
No comments:
Post a Comment